அந்திச் சூரியனின் சிகப்பு
வெட்கத்தின் வண்ணமாக
நினைவுகள்
காத்தாட வந்து போகும்
தனிமையில்
சிரித்துத் தொலைக்கிறேன்
வீட்டுத் திண்ணையில் பறவையொன்று
தன் இணையின்
உதிர் இறகோடு
பேசும் காதல் மொழி
காற்றில் தவழ்ந்து
கலக்கிறது என்னோடு
நானெந்தென்
புறங்கையின்
பச்சை நரம்புகளில்
பதிந்து கிடக்கும்
உந்தன் பெருவிரல் ரேகைகளுக்கு
பெயர் வைத்து பறக்கிறேன்.
-கனகா பாலன்.