சுதந்திர காற்றை சுவாசிப்போம் ...14

சுதந்திர தினம் கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம் ...14

தலைப்பு: சுதந்திர காற்றை சுவாசிப்போம்

காற்று சுதந்திரமாக தான் இருக்கிறது
அன்று இன்று என்றும் என்றென்றும்
உதவாத சிந்தனையோடு சுதந்திரம் பறிக்கப்பட்டு 
நிம்மதி இல்லாத வாழ்க்கையை பழக்கப்பட்டு
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை
உரிமைகள் மக்களுக்கு கிடைத்தால் போதும்
சுதந்திர காற்று தானாக வரப்போகிறது...

நாம் யாருக்கும் யாரும் அடிமையில்லை
நமது சிந்தனை நல்லாதாக  இருந்தால்
நல்ல தேசம் நன்றாக வளரும்
நல்ல சுதந்திரம் கிடைத்திடும் நாட்டில்... 

வெறும் மூச்சு காற்று சுதந்திரம் அல்ல
தனிமனிதன் செயலுக்கு தடையில்லா
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரத்திற்காக இங்கு ஏக்கம் கொள்ள கூடாது
சுதந்திர காற்றோடு பழகி சுவாசிக்க வேண்டும்
சுதந்திர காற்றை என்றும் என்றென்றும் சுவாசிப்போம்......


சி.இராஜேந்திரன்
தருமபுரி