சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் 6
சுதந்திர தினம் கவிதை
தலைப்பு: சுதந்திர காற்றை சுவாசிப்போம் ////
1. நினைத்ததை அடைவது சுதந்திரம் அல்ல//
2. இடையூறு இல்லாமல் வாழ்வதே சுதந்திரம்//
3. நாகரீகமாக இருப்பதை சுதந்திரம் அல்ல//
4. நடுநிலையாக இருப்பததே நல்லதொரு சுதந்திரம்//
5. பிறர் பாதையில் பயணிப்பது சுதந்திரம் அல்ல....!//
6. தனக்கென ஒரு தனி பாதையை//
7. உருவாக்கிக் கொள்வதே சிறந்ததொரு சுதந்திரம்//
8. பிறர்வாட பல செயல்கள் நாம் //
9. இவ்வுலகில் செய்வது சுதந்திரம் அல்ல//
10. பிறர்வாழ பல செயல்கள் செய்வதே//
11. நாம் அடைந்த உண்மையான சுதந்திரம்//
12. பெண்கள் அடிமைப்பட்டு கிடந்ததா சுதந்திரம்//
13. இன்று அரசாளும் நங்கைகளாக எண்ணிலடங்கா//
14. சாதனைகளைச் சிறகடித்து பறப்பதே சுதந்திரம்//
15. அன்று உடன்கட்டை ஏறுவதா சுதந்திரம்? //
16. இன்று உலகையே வலம் வந்து //
17. சமூகப்பாதுகாப்புடன் சாதனைப் படைப்பதே சுதந்திரம்//
18. கள்வன் கொள்ளையில் ஈடுபடுவதா சுதந்திரம்//
19. எல்லையில் வீரர்கள் தாய்நாட்டிற்காக உயிரை//
20. தியாகம் செய்வதே உண்மையான சுதந்திரம்//
21. யுத்தம் செய்வதா சுதந்திரம் இல்லை//
22. உலகம் இன்புற்று வாழ வழிவகுப்பதே//
23. சுதந்திரம்!! எனவே வாழ்க்கையில் அனைவரும்//
24. சுதந்திரம்மென்னும் ஆனந்த பூங்காற்றை சுவாசிப்போம்....//
வி.கணேஷ் பாபு,ஆரணி
Comments (0)