காதலில் தொலைந்து விட்டேன்..21

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதலில் தொலைந்து விட்டேன்..21

காதலில் தொலைந்து விட்டேன்....

பார்வைகள் மோத தீண்டிய தென்றல்
வாழ்க்கைப் பயணம் முழுதும் தொடர்ந்திட

ஏக்கம் உன்னாலே தாக்கம் செய்யவே
வஞ்சனை செய்கிறாய் வஞ்சியே நீயே

கனவில் வினவுகிறாய் காதலாய் என்னை
இதயம் வருடுகிறாய் இதமாய் கொஞ்சி

கருவிழிகள் கதை பேசி உணர்வைத் தூண்டிடவே
உலகை மறக்கிறேன் ஒரு கணம் நானே

உயிரை அசைக்கிறாய் மறுகணம் நீயே
நிழலாய் தொடர்கிறேன்  நிசமாய் பாராயோ

மழையாய் பொழிகிறேன் ஈரம் தாராயோ
காதலில் தொலைந்து விட்டேன் சகியே
வீதியில் அழைந்து செல்வது வலியே

வார்த்தையும் தவிக்குதே மௌனமும் பேசுதே
காலங்கள் கடந்தாலும் காத்திருக்கும் காதலே
மரணத்தின் வாசலிலும் பூத்திருப்பேன் உனக்காக

சுலக்சனா சுபாசங்கர் இலங்கை