முத்தமிழின் மைந்தன் பாரதி...!
பாரதியார் நினைவு தினம் கவிதை
முத்தமிழின் மைந்தன்
எட்டய புரத்து எழுச்சி நாயகன்
பட்டமாய்ப் பறந்த
பாரதத்தின் பாரதீ
அன்னைத் தமிழை
அமுதாய் பருகிய மைந்தன்
பொன்னாய் பூக்கவைத்து
பெண்ணடிமை போக்கியவரே
ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியளித்த
ஆளுமைமிக்க முண்டாசுக்கவிஞனே
மங்காத புகழோடு
மடமை கொளுத்தியவரே
சாதிமத பேதங்கள்
கலைந்த சத்தியவான்
கதியே தமிழென
கண்ணாய் வாழ்ந்தவரே
தரணியில் தளிர்க்கும் செடியாய் உன்புகழ்
வீரத்தின் வித்தே
விளைந்த மண்ணின் சொத்தே
குவளயத்தில் சிகரமாய்
குன்றாது உன் உயர்ச்சி
பவளமாய் மின்னும்
பாட்டன் பைந்தமிழ்ப் புலவரே
உன்நாமம் உயிர்த் தமிழோடு ஒன்றியதே
கிருஷ் அபி, மன்னார்.
Comments (0)