அறிஞர் அண்ணா..! 039
அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி
அண்ணாவே மீண்டும் வந்திடுக
தமிழ் நாடெனப் பெயரைத்
தந்திட்ட தலைவரே!
கமழ்கின்ற கலைமணத்தை
கைவழியும் வாய்வழியும்
உமிழ்கின்ற ஆற்றலினை
உடைமை எனக் கொண்டவரே !
அழைகின்றோம் வந்திடுக !
மீண்டும் இங்கு நீ வந்தால்
மீண்டு வரும் நல்வாழ்வு ;
மூடப் பழக்கமெலாம்
பூண்டோடு அழிந்து பின்னர்
பூத்துவரும் நல்லுலகு !
எழுதுகின்ற கோலதனை
எடுத்தே நீ பிடித்திட்டால்
அழுத பிள்ளை வாய்மூடும்
அப்படியே உருகி விடும்!
சொல்லேர் உழவன் என்றே
சோதி மிகப் பெற்றவரே!
வில் கொண்டே விளையாடும்
வீரர் குலக் கொழுந்தே !
தொல்லை துடைத்தருளத்
துரிதமாய் வந்திடுக !
பாராளுமன்றம் அதில்
பல்லறிஞர் முன்னிலையில்
சீரான சொல்லெடுத்து
சிறப்புறவே ஆங்கிலத்தில்
ஆராதனை புரிந்தீர் ;
அது கேட்க மீண்டும் உமைப்
பாரோர் அழைக் கின்றார் ;
பரிந்து ஒருநாள் வந்திடுக !
- சு.சுஷ்மிதா
சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905
Comments (0)