கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம் என்று பொருளாகும், இங்கு கோவில் எனப்படுவது கடவுள்ஃதெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும்.
அப்படிப்பட்ட கோவிலில் மனிதர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விடயங்கள் உண்டு.
கோவிலில் செய்யக்கூடாதவை சில விடயங்கள் :
கோவிலில் யாரும் தூங்கக் கூடாது.
தலையில் துணி, தொப்பி அணிந்து செல்லக்கூடாது.
கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை யாரும் மிதிக்கக் கூடாது.
விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.
குளிக்காமல் கோவிலுக்குப் போகக்கூடாது.
கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
கோவிலுக்குள் மனிதர்கள், மனிதர்களின் காலில் விழுந்து வணங்கக் கூடாது.
கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.
கோவில் படிகளில் உட்காரக் கூடாது.
சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.
மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது.
கிரகணம் இருக்கும் பொழுது கோவிலுக்கு செல்லக் கூடாது.
கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த பின் தர்மம் செய்யதல் கூடாது.
கோவிலுக்குள் வந்தவுடன் புண்ணிய தீர்த்தங்களில் காலை வைக்கக்கூடாது.
முதலில் நீரை தலையில் தௌக்த்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது.
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது.
இந்த வழிமுறைகளை பின்பற்றி, மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் அருளை பெறுவோம்…..!